குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மீலாது நபியை முன்னிட்டு குடியரசுத் துணைத்தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

Posted On: 18 OCT 2021 2:34PM by PIB Chennai

மீலாது நபியை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,

“முகமது நபியின் பிறந்த தினத்தை கொண்டாடும் மீலாது நபி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.

இரக்கம், சகிப்புத்தன்மை, சர்வதேச சகோதரத்துவம் ஆகிய சரியான பாதைகளை மனித குலத்துக்கு காட்டியவர் முகமது நபி அவர்கள்.

நியாயம், மனிதநேயம் கொண்ட இணக்கமான சமூகத்தை உருவாக்க அவரின் நிலைத்த போதனைகள் நமக்கு தொடர்ந்து வழிகாட்டட்டும்.”

*****

 



(Release ID: 1764654)



(Release ID: 1764684) Visitor Counter : 207