சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 90 .79 கோடியை கடந்து குறிப்பிடத்தக்க சாதனை

प्रविष्टि तिथि: 04 OCT 2021 9:31AM by PIB Chennai

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்  23,46,176 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 90.79 கோடியைக்  (90,79,32,861) கடந்துள்ளது88,05,668 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 26,718  பேர் குணமடைந்துள்ளதால்இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,31,21,247- ஆக அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 97.89 சதவீதமாக உள்ளது.  கடந்த 2020 மார்ச் முதல் இதுவே அதிகமான அளவு.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து 99 நாட்களாக 50,000க்கும் கீழ் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 20,799 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,64,458; கடந்த 200 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை. நாட்டில் மொத்தம் கொவிட் சிகச்சை பெறுபவர்களின் விகிதம் தற்போது 0.78 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 9,91,676 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 57.42 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு தொடர்ந்து101 நாட்களாக 3 சதவீதத்திற்கும் கீழே, 1.63 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.10 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 35 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், தொடர்ந்து 118 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760681

*******


(रिलीज़ आईडी: 1760714) आगंतुक पटल : 276
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Malayalam