நிதி அமைச்சகம்

2021-22ம் நிதியாண்டில் மொத்த நேரடி வரி வசூல் 47% அதிகரிப்பு

Posted On: 24 SEP 2021 4:24PM by PIB Chennai

2021-22ம் நிதியாண்டின் நேரடி வரி வசூல் 22.09.2021 நிலவரப்படி, ரூ. 5,70,568 கோடி. கடந்த நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் ரூ. 3,27,174 கோடி வசூலானது. இது 74.4 சதவீதம் அதிகரிப்பை காட்டுகிறது. 

கடந்த 22ம் தேதி வரை, நிகர நேரடி வசூல் ரூ.  5,70,568 கோடி. இதில் கார்ப்பரேஷன் வரி ரூ. 3,02,975கோடி, தனிநபர் வருமான வரி ரூ.  2,67,593 கோடி ஆகியவை அடங்கும்.

வருமானவரி ரீபண்ட் வழங்குவதற்கு முன்பு, 2021-22ம் ஆண்டுக்கான மொத்த நேரடி வரி வசூல் ரூ. 6,45,679 கோடி. இது இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ. 4,39,242 கோடி. இந்த நிதியாண்டில் வரி வசூல் 47 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

2021-22ம் நிதியாண்டில் இதுவரை ரீபண்ட் தொகையாக ரூ.75,111 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757715

*****************

 



(Release ID: 1757808) Visitor Counter : 219