வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

அந்நிய நேரடி முதலீட்டு வரத்து பெருமளவு உயர்வு

Posted On: 22 SEP 2021 4:31PM by PIB Chennai

 அந்நிய நேரடி முதலீட்டு கொள்கை சீர்திருத்தங்கள், முதலீட்டு வசதிகள், எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வது உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகளால் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து அதிகரித்துள்ளது.

• 2021-22 நிதியாண்டின் முதல் நான்கு மாதத்தில் 27.37 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான அந்நிய நேரடி முதலீடுகளை இந்தியா ஈட்டியுள்ளது.

இது கடந்த 2020-21 நிதி ஆண்டின் இதே காலத்தை விட 62% அதிகமாகும்.

• 2021-22-ஆம் நிதி ஆண்டின் முதல் 4 மாதத்தின் அந்நிய நேரடி பங்கு முதலீடான  20.42 பில்லியன் அமெரிக்க டாலர், அதற்கு முந்தைய ஆண்டை விட 112% உயர்வாகும்.

• 2021-22-ஆம் நிதி ஆண்டின் முதல் 4 மாதத்தின் ஒட்டுமொத்த அந்நிய நேரடி பங்கு முதலீட்டில் வாகன தொழில்துறை 23% உடன் முன்னணி துறையாக விளங்குகிறது. அதைத் தொடர்ந்து, கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை (18%), சேவைகள் துறைகளில் (10%) அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

•   வாகன தொழில்துறையில் அதிகபட்ச அந்நிய நேரடி பங்கு முதலீடு கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.

• 2021-22-ஆம் நிதி ஆண்டில் (ஜூலை 2021 வரை) ஒட்டுமொத்த அந்நிய நேரடி பங்கு முதலீட்டில் கர்நாடகா  அதிகபட்சமாக 45%, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா 23%, தில்லி 12% பங்குகளைப பெற்றுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756999

 

-----



(Release ID: 1757045) Visitor Counter : 264