பிரதமர் அலுவலகம்

சிபிஎஸ்இ தேர்வுகளில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 03 AUG 2021 8:54PM by PIB Chennai

சிபிஎஸ்இ தேர்வுகளில் வெற்றி பெற்ற பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், "சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற எனது இளம் நண்பர்களுக்கு வாழ்த்துகள். மாணவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1742147) வருகையாளர் எண்ணிக்கை : 234