பாதுகாப்பு அமைச்சகம்
மகாராஷ்டிரா வெள்ள நிவாரணப் பணியில் விமானப்படை
Posted On:
23 JUL 2021 4:18PM by PIB Chennai
மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் வெள்ள மீட்பு பணியில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.
மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் சிப்லன் மற்றும் கேத் நகரங்களில் வெள்ள நிவாரணப் பணிக்கு ஹெலிகாப்டர் தேவை என விமானப்படைக்கு நேற்று மதியம் 1.30 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
வானிலை சீரானவுடன், எம்-17 ரக ஹெலிகாப்டர் மும்பையிலிருந்து ரத்னகிரிக்கு நேற்று மாலை சென்றது. மோசமான வானிலையால் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.
அதனால் இன்று மீட்பு பணிகள் மீண்டும் தொடங்கின. மும்பையிலிருந்து மேலும் ஒரு ஹெலிகாப்டர் ரத்னகிரி வந்தது. அதில் தேசிய பேரிடர் நிவாரண குழுவினர் 10 பேர், 1 டன் நிவாரணப் பொருட்களுடன் ரத்னகிரி வந்தனர்.
ரத்னகிரியில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் இன்று காலை 11.35 மணிக்கு மீட்பு பணியை தொடங்கி வெள்ளத்திலிருந்து, இருவரை மீட்டது. வெள்ள நிவாரணப் பணிகளுக்கு, மேலும் 4 ஹெலிகாப்டர்களை விமானப்படை தயார் நிலையில் வைத்துள்ளது. மற்றொரு ஹெலிகாப்டர் புனேவில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
------
(Release ID: 1738305)
Visitor Counter : 169