ஊரக வளர்ச்சி அமைச்சகம்

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக திரு.கிரிராஜ் சிங் பொறுப்பேற்பு


ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சராக திரு.பக்கன் சிங் குலாஸ்தே பொறுப்பேற்றுக் கொண்டார்

Posted On: 08 JUL 2021 4:44PM by PIB Chennai

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக திரு.கிரிராஜ் சிங் பொறுப்பேற்றுக்கொண்டார்.

டிவிட்டர் மூலமாக இதனைத் தெரிவித்த மாண்புமிகு அமைச்சர், புதிய பொறுப்பினை தன் மீது நம்பிக்கை வைத்து வழங்கிய பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்தார்.

திரு.நரேந்திர சிங் தோமர் மற்றும் முக்கிய விருந்தினர்கள் அமைச்சர் திரு.கிரிராஜ் சிங்கை அவரது அறைக்கு வரவேற்றனர். ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்விக் நிரஞ்சன் ஜோதியும் இந்நிகழ்வில் உடனிருந்தார்.

அப்போது ஊடகங்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் திரு.கிரிராஜ் சிங், தனது பொறுப்புகளை முழு மனதோடு மேற்கொள்வேன் என உறுதிக்கொண்டார்.

அதேபோல், ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சராக திரு.பக்கன் சிங் குலாஸ்தே பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வின் போது ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் திரு.நாகேந்திர நாத் சின்ஹா, துறை கூடுதல் செயலாளர் திருமதி.அல்கா உபாத்தியாயா மற்றும் முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733722

                                                                                               ------



(Release ID: 1733946) Visitor Counter : 495