எரிசக்தி அமைச்சகம்

கன்வர்ஜன்ஸ் எனர்ஜி சர்வீசஸ் நிறுவனத்துடன் மின்னணு இயக்கத்திறன் ஒப்பந்தங்களில் தேசிய நீர்மின் கழகம் கையெழுத்து

Posted On: 05 JUN 2021 12:19PM by PIB Chennai

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இந்தியாவின் முன்னணி நீர்மின்சார நிறுவனமாக இயங்கும் தேசிய நீர்மின் கழகம்கன்வர்ஜன்ஸ் எனர்ஜி சர்வீசஸ் நிறுவனத்துடன் 25 மின்சார வாகனங்களை குத்தகைக்கு வழங்குவதற்காகவும், மூன்று மின்சார வாகன  மின்னேற்றிகளை தேசிய நீர்மின் கழகத்திற்கு வழங்குவதற்காகவும் மின்னணு இயக்கத்திறன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

இந்தியாவில் மத்திய பொதுத்துறை நிறுவனங்களுள் பிரம்மாண்ட மின்சார வாகனத் தொகுதிகளைப் பெற்றுள்ள நிறுவனமாக தேசிய நீர்மின் கழகம் அமையும்.

காணொலிக் காட்சி வாயிலாக இந்த ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின. தேசிய நீர்மின் கழகத்தின் தலைமை தொலைநோக்கு அதிகாரி திரு ஏ கே ஸ்ரீவஸ்தவா, கன்வர்ஜன்ஸ் எனர்ஜி சர்வீசஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநரும், தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியுமான திருமிகு மஹுவா ஆச்சாரியாநிர்வாக துணைத் தலைவர் திரு சௌரப் குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு சுற்றுச்சூழலை நோக்கிய உறுதிப்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் இந்த ஒப்பந்தத்தில் தேசிய நீர்மின் கழகம் கையெழுத்திட்டது.

தேசிய நீர்மின் கழகத்தில் எரிசக்தியின் திறமையான பயன்பாடு மற்றும் சேமிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்காக இந்த இரு நிறுவனங்களும் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724629

*****************



(Release ID: 1724708) Visitor Counter : 139