எரிசக்தி அமைச்சகம்

மின் உற்பத்தி செலவை குறைக்க, உள்நாட்டு நிலக்கரியை பயன்படுத்துவதற்கான விதிகள் தளர்வுக்கு மின்துறை அமைச்சகம் அனுமதி : இறக்குமதி குறையும்

Posted On: 03 JUN 2021 3:59PM by PIB Chennai

மின் உற்பத்தி செலவை குறைப்பதற்காக, மின் உற்பத்தி நிலையங்களில் உள்நாட்டு நிலக்கரியை பயன்படுத்துவதில் தளர்வு முறையை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இதன்படி மாநிலங்கள்  மின் உற்பத்தி நிலையங்களில், உள்நாட்டில் கிடைக்கும் நிலக்கரி இணைப்புகளை பயன்படுத்தி கொள்ள முடியும். இது மின் நிலையங்களின் உற்பத்தி செலவை குறைக்கும். இந்த சேமிப்பு, அப்படியே நுகர்வோருக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும்.

இத்திட்டம் மூலம் தற்போது பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச மக்கள் பயன்பெறுகின்றனர். பஞ்சாப்பில் மட்டும் ஓராண்டு சேமிப்பு ரூ.300 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது நிலக்கரி இறக்குமதியை குறைத்து, தற்சார்பு இந்தியாவுக்கு உதவும். இதன் மூலம் கார்பன் உமிழ்வும் குறையும். உள்நாட்டில் இருந்து கொண்டுவரப்படும்  நிலக்கரிகளை, மின் உற்பத்தி நிலையங்கள், அந்த மாநிலத்திற்கு விநியோகிக்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய மட்டும் பயன்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724056

*****************



(Release ID: 1724139) Visitor Counter : 127