சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

22 கோடிக்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன : 1.77 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்களிடம் உள்ளன

Posted On: 26 MAY 2021 10:08AM by PIB Chennai

தேசியளவிலான தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்கி உதவி வருகிறதுமேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்யவும், மத்திய அரசு உதவி வருகிறது.

ஒவ்வொரு மாதமும், மத்திய மருந்துகள்  பரிசோதனைக்கூடம் அனுமதிக்கும் தடுப்பூசி நிறுவனங்களின் மருந்துகளில் 50 சதவீதத்தை மத்திய  அரசு கொள்முதல் செய்கிறது. இது  மாநிலங்களுக்கு தொடர்ந்து இலவசமாக அளிக்கப்படும்.

மத்திய அரசு இதுவரை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, இலவச விநியோகம் மற்றும் நேரடி கொள்முதல் முறைகள் மூலம் 22 கோடிக்கும் மேற்பட்ட (22,00,59,880) தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.

இவற்றில் மொத்த நுகர்வு, வீணான மருந்துகள் உட்பட 20,13,74,636 டோஸ்கள்.

1.77 கோடிக்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசி டோஸ்கள் (1,77,52,594) மக்களுக்கு போடுவதற்காக மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகளிடம் இன்னும் உள்ளன

மேலும், 1 லட்சம் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் இன்னும் 3 நாட்களில் பெறவுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721795

-----



(Release ID: 1721863) Visitor Counter : 278