சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சர்வதேச சமூகத்திலிருந்து வழங்கப்பட்ட நிவாரண உதவிகள், மாநிலங்களுக்கு துரிதமாக விநியோகம்

प्रविष्टि तिथि: 25 MAY 2021 2:48PM by PIB Chennai

கொவிட் தொற்றின் பாதிப்பு பெரும் மடங்கு நாட்டில் உயர்ந்திருப்பதால் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் நிவாரண மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளை வழங்கி வருகின்றன.

2021 ஏப்ரல் 27 முதல் மே 24 வரை பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகள் அனுப்பிய 17,755 பிராணவாயு செறிவூட்டிகள், 16,301 பிராணவாயு சிலிண்டர்கள், 19 பிராணவாயு உற்பத்திக் கருவிகள், 13,449 செயற்கை சுவாசக் கருவிகள், சுமார் 6.9 லட்சம் ரெமிடெசிவிர் குப்பிகள், 12 லட்சம் ஃபேவிபிரவிர் மாத்திரைகள் ஆகியவை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

2021 மே 23/24 அன்று ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஒன்டாரியோ (கனடா),  அமெரிக்க இந்திய கூட்டு மன்றம், நெஸ்லே (சுவிஸ் இந்தியா வர்த்தக சபை) ஆகியவற்றிடமிருந்து  பெறப்பட்ட முக்கியப் பொருட்கள்:

பிராணவாயு செறிவூட்டிகள்: 20

பிராணவாயு சிலிண்டர்கள்: 540

செயற்கை சுவாசக் கருவிகள்: 536

பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து வழங்கப்படும் பொருட்கள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் துரிதகதியில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதனை பிரத்தியேக ஒருங்கிணைப்பு மையத்தின் வாயிலாக மத்திய சுகாதார அமைச்சகம் விரிவாகக் கண்காணித்து வருகின்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721553

 

-----


(रिलीज़ आईडी: 1721611) आगंतुक पटल : 280
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Telugu , Kannada , Malayalam