பிரதமர் அலுவலகம்
உ.பி. அமைச்சர் திரு விஜய் காஷ்யப்பின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAY 2021 11:33PM by PIB Chennai
உத்தரபிரதேச அமைச்சர் திரு விஜய் காஷ்யப்பின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், "உத்தரபிரதேச பாஜக தலைவரும், அம்மாநில அமைச்சருமான திரு விஜய் காஷ்யப் அவர்களின் மரணம் மிகவும் துயரமளிக்கிறது. அவர் அம்மண்ணின் தலைவராக இருந்தார், எப்போதும் பொது நலனுக்காக அர்ப்பணிப்புடன் பாடுபட்டார். இந்த துயரமான தருணத்தில், அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி! " என்று கூறியுள்ளார்.
----
(வெளியீட்டு அடையாள எண்: 1720068)
வருகையாளர் எண்ணிக்கை : 122
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam