உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

“டவ்-தே” புயல் மேற்கு கடற்கரையை நோக்கி முன்னேறி வரும் நிலையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விமான நிலையங்கள் மேற்கொண்டுள்ளன

Posted On: 15 MAY 2021 5:22PM by PIB Chennai

.நாட்டின் மேற்கு கடற்கரையை நோக்கி டவ்-தேபுயல் முன்னேறி வரும் நிலையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விமான நிலையங்கள் மேற்கொண்டுள்ளன.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தொழில்நுட்ப சுற்றறிக்கையின் அடிப்படையில், மேற்கு கடற்கரைப் பகுதியில் இருக்கும் விமான நிலையங்களின் தயார்நிலையை இந்திய விமான நிலையங்களின் ஆணையம் ஆய்வு செய்தது.

தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள் குறித்தும் தில்லி பெருநிறுவன தலைமையகத்தில் இருந்து காணொலி மூலமாக ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து விமான நிலையங்களும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் உறுப்பினர் (செயல்பாடுகள்) திரு ஐ என் மூர்த்தி அறிவுறுத்தினார்.

2021 மே 16 காலை 10 மணி வரை லட்சத்தீவுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிலைமையை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

*****************



(Release ID: 1718936) Visitor Counter : 179