ரெயில்வே அமைச்சகம்

ஏழு மாநிலங்களில் 17 பல்வேறு இடங்களில் கொவிட் பராமரிப்பு ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக செயல்படுகின்றன


சுமார் 4700 படுக்கைகளுடன் மொத்தம் 298 தனிமைப்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன

Posted On: 08 MAY 2021 4:24PM by PIB Chennai

கொவிட்-19-க்கு எதிரான தொடர் போரில் மாநில அரசுகள் மற்றும் நிர்வாகங்களை சரியான நேரத்தில் ஒருங்கிணைப்புடன் சென்றடைவதற்காக ரயில்வே அதிகாரிகளும் அவர்களது குழுக்களும் தொடர்ந்து முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

கவனமுடன் கூடிய கண்காணிப்பு மற்றும் விரிவான பணி விதிமுறைகள் ஆகியவற்றின் மூலம் மாநிலங்களின் தேவைக்கு ஏற்றவாறு தனிமை வார்டு ரயில் பெட்டிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்வே அனுப்பி வருகிறது.

ஏழு மாநிலங்களில்  17 ரயில் நிலையங்களில் கொவிட் பராமரிப்பு ரயில் பெட்டிகள் நோயாளிகளுக்கு சேவை ஆற்றுகின்றன. சுமார் 4700 படுக்கைகளுடன் மொத்தம் 298 தனிமை சிகிச்சை ரயில் பெட்டிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன

மகாராஷ்டிராவில் மட்டும் 60 பெட்டிகளை ரயில்வே கொவிட் சேவைக்காக நிலைநிறுத்தி உள்ளது. மத்தியப் பிரதேசத்திற்கு 42 பெட்டிகளை ரயில்வே அனுப்பியுள்ளது. இவற்றில் நோயாளிகள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்து செல்கின்றனர்.

சமீபத்திய தகவலின் படி அசாம் மாநிலத்தின் தேவைகளுக்கு ஏற்ப 21 தனிமை சிகிச்சை ரயில் பெட்டிகளை கவுகாத்திக்கும் 20 தனிமை பெட்டிகளை பார்த்தார்பூருக்கும் ரயில்வே அனுப்பியுள்ளது.

முன்னதாக இந்த வாரம், சபர்மதி சந்திலோதியா மற்றும் திமாபூருக்கு கொரோனா தனிமை சிகிச்சை  ரயில் பெட்டிகள் அனுப்பப்பட்டன. தில்லி மாநில அரசின் முழு தேவையையும் பூர்த்தி செய்யும் விதமாக 1,200 படுக்கைகளுடன் கூடிய 75 பெட்டிகளை ரயில்வே அனுப்பியுள்ளது.

உத்தரப் பிரதேச அரசு பெட்டிகளுக்கான கோரிக்கையை இதுவரை வைக்காத போதிலும்,  10 பெட்டிகளை  இரயில்வே அனுப்பியுள்ளது

சுமார் எழுபதாயிரம் படுக்கைகளுடன் கூடிய 4400 தனிமை வார்டு ரயில்  பெட்டிகளை ரயில்வே இதுவரை தயார் செய்துள்ளது.

**



(Release ID: 1717100) Visitor Counter : 172