சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், அடுத்த 3 நாட்களில் சுமார் 10 லட்சம் தடுப்பூசி

Posted On: 07 MAY 2021 10:24AM by PIB Chennai

அடுத்த மூன்று நாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 10,25,000 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக அளிக்க உள்ளது.

இதுவரை, 17.35 கோடி (17,35,07,770) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இன்று காலை எட்டு மணி வரையிலான நிலவரப்படி, 16,44,77,100 டோஸ் தடுப்பு மருந்து (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

90,30,670 கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பில் உள்ளன.

தமிழக நிலவரம் : தமிழ்நாட்டுக்கு இதுவரை 72,03,950 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 3.98 விழுக்காடு வீணானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, 65,90,328 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 6,13,622 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்தின்வசம் கையிருப்பில் உள்ளன.

புதுச்சேரி நிலவரம் : புதுச்சேரி யூனியன்பிரதேசத்திற்கு இதுவரை 3,97,130 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 0.76 விழுக்காடு வீணானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, 2,11,500 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1,85,630 தடுப்பூசி டோஸ்கள் புதுச்சேரிவசம் கையிருப்பில் உள்ளன.
 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1716688

 

********

 

(Release ID: 1716688)



(Release ID: 1716719) Visitor Counter : 214