சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இதுவரை இலவசமாக வழங்கியுள்ள கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை: 16.54 கோடி

प्रविष्टि तिथि: 03 MAY 2021 11:38AM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒருங்கிணைந்துஅரசின் முழுமையான அணுகுமுறையுடன்இந்திய அரசு தீவிரமாகப் போராடி வருகிறது. பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்திய அரசின் ஐந்து அம்ச உத்திகளில் பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, சரியான வழிகாட்டு நெறிமுறை ஆகியவற்றுடன் தடுப்பூசி, மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது.

கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் மூன்றாவது கட்டம் 2021, மே 1 அன்று தொடங்கியது.

இந்திய அரசு இதுவரை சுமார் 16.54 கோடி (16,54,93,410) தடுப்பூசி டோஸ்களை  மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது. இவற்றில் வீணானவை  உட்பட மொத்தம் 15,79,21,537 டோஸ்கள் (இன்று காலை 8 மணிக்குக் கிடைத்த தரவின் படி) போடப்பட்டுள்ளன.

75 லட்சத்திற்கும் அதிகமான (75,71,873) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் கையிருப்பில் உள்ளன.

கூடுதலாக சுமார் 59 லட்சம் டோஸ்கள் (59,70,670), அடுத்த மூன்று நாட்களில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கூடுதலாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715621

*****

 

(Release ID: 1715621)


(रिलीज़ आईडी: 1715651) आगंतुक पटल : 286
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Malayalam