பாதுகாப்பு அமைச்சகம்

இரண்டாம் கொவிட்-19 அலைக்கு எதிரான போரில் ராணுவ அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு படைகளின் முயற்சிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்

Posted On: 01 MAY 2021 5:02PM by PIB Chennai

கொவிட்-19-க்கு எதிரான நடவடிக்கையில் நாட்டின் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஆதரவளிக்கும் ராணுவ அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு படைகளின் முயற்சிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2021 மே 1 அன்று காணொலி மூலம் ஆய்வு செய்தார்.  

பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய்குமார்,

 கடற்படை தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங், விமானப்படை தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஆர் கே எஸ் பதூரியா, ராணுவ தலைவர் ஜெனரல் எம் எம் நரவனே, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளர் மற்றும் டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி, பாதுகாப்பு படைகளின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநர் சர்ஜன் வைஸ் அட்மிரல் ரஜத் தத்தா, ஒருங்கிணைந்த பாதுகாப்பு படைகளின் துணைத்தலைவர் (மருத்துவம்) லெப்டினன்ட் ஜெனரல் மதூரி கனித்கர் மற்றும் ராணுவ கொள்முதல் கூடுதல் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் சுமார் 600 கூடுதல் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், பல்வேறு மருத்துவமனைகளில் உதவுவதற்காக 200 போர்க்கள செவிலியர்கள், உதவியாளர்களை இந்திய கடற்படை அனுப்பி உள்ளதாகவும் திரு ராஜ்நாத் சிங்கிற்கு தெரிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் மற்றும் ஹரியானாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கு 300 தேசிய மாணவர் படையினர் மற்றும் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். வீட்டில் தனிமை சிகிச்சையில் உள்ளவர்களுக்காக தொலை மருத்துவ சேவையும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் 720 க்கும் அதிகமான படுக்கைகளை இந்திய ராணுவம் கிடைக்க செய்துள்ளது. மாநில மற்றும் மாவட்ட அளவில் உள்ள உள்ளூர் நிர்வாகங்களிடம் தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு ராணுவத்தை பாதுகாப்பு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

உள்ளூர் நிர்வாகத்திற்கு உள்ளூர் ராணுவ தலைமையகங்கள் திறம்பட உதவ வேண்டும் என்று ஜெனரல் பிபின் ராவத் ஆலோசனை கூறினார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் லக்னோவில் அமைக்கப்பட்டு வரும் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை இன்னும் சில நாட்களில் செயல்படத் துவங்கும் என்று ராஜ்நாத் சிங்கிற்கு எடுத்துரைக்கப்பட்டது. வாரணாசியில் அமைக்கப்பட்டுவரும் ஒரு மருத்துவமனை மே 5 ஆம் தேதியன்று தயாராக இருக்கும். பிஎம் கேர்ஸ் நிதியின் மூலம் உருவாக்கப்பட்டு வரும் 380 ஆக்சிஜன் ஆலைகளில் முதல் நான்கு புதுதில்லியில் உள்ள மருத்துவமனைகளில் அடுத்த வாரம் நிறுவப்படும் என்று டிஆர்டிஓ தலைவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்தும் உள் நாட்டிலிருந்தும் ஆக்சிஜன் கொள்கலன்களின் போக்குவரத்துக்கு பாதுகாப்பு படைகள் அளித்துவரும் ஆதரவை பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார். உள்ளாட்சி நிர்வாகத்திற்கு அனைத்து ஆதரவையும் பாதுகாப்பு படைகள் வழங்க வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் இதனைக் கண்காணிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715366

-------



(Release ID: 1715414) Visitor Counter : 178