பிரதமர் அலுவலகம்

கத்தார் அமீருடன் பிரதமரின் தொலைபேசி உரையாடல்

Posted On: 27 APR 2021 9:30PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, கத்தார் நாட்டின் அமீர் மேதகு தமீம் பின் அகமது அல் தானியுடன் தொலைபேசியில் உரையாடினார்.

திரு.மோடி சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “கத்தார் நாட்டு அமீர் மேதகு தமீம் பின் அகமது அல் தானி அவர்களுடன் இன்று நல்ல உரையாடலை நிகழ்த்தினேன். கொவிட்-19 தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு அவர் அளித்து வரும் ஆதரவுக்காகவும், உதவிக்காகவும் நான் நன்றி கூறினேன். கத்தார் நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் மீது காட்டி வரும் அக்கறைக்காக, நமது நன்றியை அவரிடம் தெரிவித்தேன்“ என்று கூறியுள்ளார்.

 

****


(Release ID: 1714508) Visitor Counter : 186