சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

80 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது

Posted On: 13 FEB 2021 8:11PM by PIB Chennai

நாட்டில் கொவிட்-19 தடுப்பு மருந்து பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டி உள்ளது.

நாடு தழுவிய மிகப்பெரிய கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் 29-ஆம் நாளான இன்று மட்டும் 84,807 பேருக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

1,69,215 அமர்வுகளில் 80,52,454 சுகாதாரம் மற்றும் முன்கள  பணியாளர்களுக்கு இன்று மாலை 6 மணி வரை  தடுப்பு மருந்து வழங்கப்பட்டு இருக்கிறதென்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதி தகவல்கள் இன்று பின்னிரவு கிடைக்கும்.

தடுப்பு மருந்து வழங்கலின் இரண்டாவது கட்டம் இன்று தொடங்கியது. முதல் கட்டத்தில் தடுப்பு மருந்து பெற்று 28 நாட்கள் நிறைவு செய்தவர்களுக்கு இரண்டாம் கட்டத்தில் தடுப்பூசி போடப்படுகிறது.

அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கொவிட் தடுப்பு மருந்து வழங்கலின் முன்னேற்றத்தை மத்திய சுகாதார செயலாளர் இன்று ஆய்வு செய்து குறித்த நேரத்தில் தகவல்களை வழங்குமாறு அறிவுறுத்தினார்.

உலகின் மிகப்பெரிய தடுப்புமருந்து வழங்கல் நடவடிக்கைகளில் ஒன்றான இந்தியாவின் கொவிட் தடுப்பூசி விநியோக செயல்முறை, 2021 ஜனவரி 16 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697804

---



(Release ID: 1697821) Visitor Counter : 230