ஜவுளித்துறை அமைச்சகம்

ஜவுளி அமைச்சகத்தின் செயலாளராக திரு யு பி சிங் பதவியேற்றார்

Posted On: 27 JAN 2021 5:23PM by PIB Chennai

ஒடிசா பிரிவைச் சேர்ந்த 1985-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான திரு யு பி சிங், மத்திய ஜவுளி அமைச்சகத்தின் செயலாளராக இன்று பதவியேற்றார். முன்னதாக, நீர் வளம், ஆறுகள் மேம்பாடு, கங்கை புத்தாக்கத் துறையின் செயலாளராக 2017 டிசம்பர் 1 முதல் அவர் பணியாற்றி வந்தார்.

மத்திய, மாநில அரசுகளில் முக்கிய பதவிகளை வகித்துள்ள அவர், பல்வேறு துறைகளில் நீண்ட அனுபவம் உள்ளவர். நீர் வளம், ஆறுகள் மேம்பாடு, கங்கை புத்தாக்கத் துறையில் 2016 ஜூன் 1 அன்று கூடுதல் செயலாளராக இணைந்த அவர், தேசிய நீர் இயக்கத்தின் இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார்.

பின்னர் அவர் தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கத்தின் தலைமை இயக்குநராக 2016 அக்டோபர் 7 அன்று பதிவியேற்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692682

***



(Release ID: 1692736) Visitor Counter : 161