பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் நேபாள வெளியுறவு அமைச்சர் திரு பிரதீப் குமார் கியாவாலியிடையே சந்திப்பு

Posted On: 16 JAN 2021 1:57PM by PIB Chennai

நேபாள வெளியுறவு அமைச்சர் திரு பிரதீப் குமார் கியாவாலி, இந்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கை புது தில்லியில் இன்று சந்தித்தார். ஆறாவது இந்திய நேபாள இணை ஆணைய கூட்டத்திற்காக இந்தியாவுக்கு நேபாள வெளியுறவு அமைச்சர் வந்துள்ளார். பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின்போது நேபாள அரசு தலைமையின் வாழ்த்துகளை தெரிவித்த அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர், இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார். இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள அனைத்து உதவிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். அதே உணர்வுகளை வெளிப்படுத்திய திரு ராஜ்நாத் சிங், மக்களிடையேயான உறவுகளின் அடிப்படையில் இந்திய-நேபாள உறவுகள் அமைந்துள்ளதாக கூறினார்.

நேபாளத்துடன் தமக்குள்ள தனிப்பட்ட தொடர்பையும், அந்நாட்டின் தலைமையோடு உள்ள நீண்ட உறவையும், நேபாள மக்களுக்கான தனித்துவமிக்க அன்பையும் பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படுத்தினார். மனிதாபிமான உதவிகளையும், பேரிடர் நிவாரண பயிற்சியையும், திறன் வளர்த்தலையும் நேபாளத்திற்கு வழங்க இந்தியா தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கியதற்காக இந்தியாவுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்த நேபாள வெளியுறவு அமைச்சர், பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் நேபாளத்திற்குமான சிறப்பான உறவை மேலும் ஆழப்படுத்தவும், வலுப்படுத்தவும் இந்தியா விரும்புவதாக பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689025

                                                                             ------



(Release ID: 1689115) Visitor Counter : 182