நித்தி ஆயோக்

இணையம் மூலம் வழக்குகளை தீர்ப்பதற்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த இயக்கம் : நிதி ஆயோக்கும், பாட்னா உயர் நீதிமன்றம் தொடங்கின

இடுகை இடப்பட்ட நாள்: 08 DEC 2020 6:42PM by PIB Chennai

பெருந்தொற்றுக்கு பிந்தைய உலகத்தில் தொழில்நுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலம் அனைவருக்கும் எளிதாக நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கான இயக்கத்தின் தொடக்க நிகழ்வை பாட்னா உயர் நீதிமன்றத்துடன் இணைந்து நிதி ஆயோக் நடத்தியது.

2020 டிசம்பர் 7-ஆம் தேதி நடந்த இந்த நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நவீன் சின்ஹா, பாட்னா நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஹேமந்த் ஸ்ரீவத்ஸவா, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி திரு அமிதாப் காந்த்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வரவேற்புரை ஆற்றிய திரு அமிதாப் காந்த், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கூட்டம் என்றும், இதன் மூலம் அனைவருக்கும் எளிதாகவும், குறைந்த செலவிலும் நீதி கிடைக்கும் என்றும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679148

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1679164) வருகையாளர் எண்ணிக்கை : 288
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Telugu , Kannada