சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

என்பிசிஎஃப்டிசி, என்எஸ்எஃப்டிசி- இந்திய மத்திய வங்கி உடன்படிக்கையில் கையெழுத்து

Posted On: 07 DEC 2020 4:19PM by PIB Chennai

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ், பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள எஸ்.சி மற்றும் ஓபிசி பிரிவினர் அடங்கிய தனிநபர் பயனாளிகளும், சுய உதவிக் குழுக்களும் பயனடையும் வகையில் செயல்படுத்தப்படும் விஸ்வாஸ் திட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. இதில்  தேசிய பிற்படுத்தப்பட்டோர் பிரிவு நிதி மற்றும் மேம்பாட்டு கழகமும் (என்பிசிஎஃப்டிசி),  தேசிய எஸ்.சி பிரிவினர் நிதி மேம்பாட்டு கழகமும் (என்எஸ்எஃப்டிசி) இந்திய மத்திய வங்கியுடன் கையெழுத்திட்டுள்ளன.

இதன்மூலம் ஓபிசி/எஸ்.சி சுய உதவிக் குழுக்கள் ரூபாய் 4 லட்சம் வரையும்ஓபிசி/எஸ்.சி தனி நபர்கள் ரூபாய் 2 லட்சம் வரையும் கடன்கள் பெறலாம். கடன் பெறுவோருக்கு 5 சதவீத வட்டி மானியத் தொகை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

இந்த உடன்படிக்கையில் இந்திய மத்திய வங்கியின் களப்பொதுமேலாளர் திரு வி கே மகேந்திரு, தேசிய பிற்படுத்தப்பட்டோர் பிரிவு நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் திட்டப் பொது மேலாளர் திருமதி அனுபமா சூத், தேசிய எஸ்.சி பிரிவினர் நிதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைமைப் பொது மேலாளர் திரு தேவானந்த் ஆகியோர் இந்தக் கழகங்களின் மேலாண் இயக்குநர் திரு கே நாராயண் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678827

*******



(Release ID: 1678871) Visitor Counter : 166