இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

நமது மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள்தான் நமது பலம் : மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ

Posted On: 03 DEC 2020 8:00PM by PIB Chennai

நமது மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள்தான் நமது பலம் என  மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

29வது உலக மாற்றுத் திறனாளி தினத்தை முன்னிட்டு, காணொலிக் காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ பேசியதாவது:

`மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள்நம் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் பலமாகவும், உத்வேகமாகவும் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவளிக்க விளையாட்டுத்துறை அமைச்சகம் அனைத்தையும் செய்யும். விளையாட்டு வீரர்களுக்கும், மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நாம் இரு தரப்பினருக்கும், ஒரே விதமான பாராட்டு, அங்கீகாரம், பரிசுத் தொகை ஆகியவற்றை வழங்குகிறோம். மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு முடிந்த அளவு உதவும்படி மாநில அரசுகளுக்கு நான் வேண்டுகோள் விடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு, மத்திய அரசு எப்போதும், விரைவான உதவி அளிப்பதற்காக பத்ம ஸ்ரீ, கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகளைப் பெற்ற விளையாட்டு வீரர் திரு தேவேந்திர ஜஜாரியா நன்றி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1678118



(Release ID: 1678144) Visitor Counter : 147