பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஊழலுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது: மத்திய அமைச்சர் திரு ஜிதேந்திர சிங்

Posted On: 02 NOV 2020 5:04PM by PIB Chennai

ஊழல் கண்காணிப்பு வாரம் என்பது ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுப்பதற்கான அரசின் உறுதியை வலியுறுத்துவதற்கான ஒரு நிகழ்வு என்று மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைகள் துறையின் அலுவலர்களுக்கு ஒருமைப்பாட்டு உறுதிமொழியை செய்து வைத்த அவர், ஊழலுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்று கூறினார்.

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைகள் துறையின் 'பெருந்தொற்றின் போது சிறந்த ஆளுகை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சிந்தனைப் பெட்டி' என்னும் திட்டத்தை இந்த நிகழ்வின் போது அமைச்சர் தொடங்கி வைத்தார்.  'மின்-ஆளுகையில் சிறந்த நடவடிக்கைகள்' குறித்த சமூக ஊடக பதிவுகளையும் அவர் வெளியிட்டார்.

 

பிரதமரின் தாரக மந்திரமான 'ஊழலுக்கு எதிரான பூஜ்ய சகிப்புத் தன்மையை' தனது உரையில் வலியுறுத்திய திரு ஜிதேந்திர சிங், ஊழலுக்கு எதிராக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

  'பெருந்தொற்றின் போது சிறந்த ஆளுகை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சிந்தனைப் பெட்டி' திட்டம் மைகவ்  தளத்திலும்நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைகள் துறையாலும் செயல்படுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669488

*******

(Release ID: 1669488)



(Release ID: 1669596) Visitor Counter : 222