ஜல்சக்தி அமைச்சகம்

மிசோரம் மாநிலத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் செயல்பாடு குறித்து ஜல் சக்தி அமைச்சகம் ஆய்வு

Posted On: 01 NOV 2020 11:36AM by PIB Chennai

மிசோரம் மாநிலத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் செயல்பாடு குறித்து ஜல்சக்தி அமைச்சகம் நடத்திய இடைக்கால ஆய்வு கூட்டத்தில் மாநில அதிகாரிகள், திட்ட அறிக்கையை தேசிய ஜல் ஜீவன் இயக்கத்திடம் காணொலிக் காட்சி வாயிலாக வழங்கினர்.

இந்த அறிக்கையின்படி, மிசோரம் மாநிலத்தில் வரும் 2022- 23 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள சுமார் 1.27 லட்சம் ஊரக வீடுகளில் 1.02 லட்சம் வீடுகளில் குழாய் இணைப்புகள் இல்லை. 2020- 21 ஆம் ஆண்டில் 31,963 வீடுகளுக்குக் குழாய் இணைப்புகளை வழங்க அந்த மாநிலம் திட்டமிட்டுள்ளது.

அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர மத்திய அரசு தயாராக உள்ளது. 2020- 21 ஆம் ஆண்டில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் மிசோரம் மாநிலத்திற்கு மத்திய அரசு ரூபாய் 79.30 கோடியை ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் இந்த நிதி உதவியை முழுவதும் முறையாக பயன்படுத்தி இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு தேசிய ஜல் ஜீவன் இயக்க அதிகாரிகள், மிசோரம் மாநில அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669258

*******

(Release ID: 1669258)



(Release ID: 1669335) Visitor Counter : 137