சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அதன் ஆண்டு பொது கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்கினார்

Posted On: 15 OCT 2020 6:02PM by PIB Chennai

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஆண்டு பொது கூட்டத்துக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் இன்று தலைமை தாங்கினார்.

இந்திய செஞ்சிலுவை சங்கத்தை தொடர்ந்து ஊக்குவித்து, ஆதரவளிப்பதற்காக குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்துக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், கொவிட் தொற்று காரணமாக, செஞ்சிலுவை சங்கத்தின் ஆண்டு பொதுக் கூட்டம் முதல் முறையாக காணொலி காட்சி மூலம் நடைபெறுவதாக குறிப்பிட்டார்.

மக்கள் சேவையில், இந்திய செஞ்சிலுவை சங்கம் 100 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக, அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், கொவிட் பாதிப்பு சூழல் 10வது மாதங்களாக தொடர்வதையும் குறிப்பிட்டார். 

கொவிட் தொற்று சூழலில், தனது தொலைநோக்கு மூலம், நாட்டை திறம்பட வழிநடத்தி செல்வதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு  டாக்டர் ஹர்ஷ் வர்தன் நன்றி தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் இந்திய முன்னணி வீரர்களின் பங்களிப்பை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

கொவிட்டுக்கு எதிரான போராட்டம் மக்கள் இயக்கமாக மாறியுள்ளதாக பிரதமர் கூறியதை அவர் நினைவுபடுத்தினார். கூட்டு முயற்சியன் காரணமாக பெரும்பாலான உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும், இந்த நிலை தொடரும் எனவும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

இந்திய செங்சிலுவை சங்கத்தின் ரத்த வங்கி சேவைகள், ஆம்புலன்ஸ் சேவைகள் ஆகியவற்றையும் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664832

**********************


(Release ID: 1664933)