நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

குறைந்தபட்ச ஆதரவு விலையில் 2020- 21 கரீப் பருவத்திற்கான சந்தைப்படுத்துதல்


அக்டோபர் 11-ஆம் தேதி வரை 8032.62 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலையில் 42.55 லட்சம் மெட்ரிக் டன் நெல், 3.57 லட்சம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

Posted On: 12 OCT 2020 6:04PM by PIB Chennai

2020- 21 கரீப் பருவத்திற்குத் தேவையான சந்தைப்படுத்துதல் தொடங்கப்பட்டதையடுத்து, கடந்த காலங்களைப் போலவே இந்த வருடமும் அதே குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து அரசு பயிர்களைக் கொள்முதல் செய்கிறது.

அக்டோபர் 11-ஆம் தேதி வரை 8032.62 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதாரவு விலையில்  42.55 லட்சம் மெட்ரிக் டன் நெல், 3.57 லட்சம் விவசாயிகளிடமிருந்து  கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று 30.70 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் விதைகளை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, உத்திரப்பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைப்போல 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரையை ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அக்டோபர் 11-ஆம் தேதி வரை அரசு தன் முதன்மை முகமைகளின் மூலம் 4.36 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில்  606.56 மெட்ரிக் டன் அவரை விதையும் உளுந்தும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 533 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது. இதேபோல 52.40 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 5089 மெட்ரிக் டன் கொப்பரையைக் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள 3961 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கிய பருத்தி விதைகளுக்கான கொள்முதல், அக்டோபர் 11-ஆம் தேதி வரை 7545 லட்சம் ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 24863 பேல்களை, இந்திய பருத்தி நிறுவனம் 5252 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663755

**********************



(Release ID: 1663843) Visitor Counter : 126