அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புருசெல்லா தடுப்பூசி தொழில்நுட்பத்தை பரிமாற்றம் செய்தது உயிரி தொழில்நுட்ப துறை(DBT)

Posted On: 25 SEP 2020 4:38PM by PIB Chennai

புருசெல்லா தடுப்பூசி தொழில்நுட்பத்தை உயிரி தொழில்நுட்ப துறை பரிமாற்றம் செய்தது.

புருசெல்லோசிஸ் என்பது ஒரு பாக்டீரியா நோய்.  இது கால்நடைகளில், குறிப்பாக எருமை மாடுகளில் மலட்டு தன்மையை ஏற்படுத்துகிறது. கர்ப்பத்தின் கடைசி கட்டத்தில் கருக்கலைப்பைத் தூண்டுகிறது, கருவுறாமை மற்றும் பிற இனப்பெருக்கப் பிரச்சினை ஆகியவற்றையும் ஏற்படுத்துகிறது. இதனால்   பால் மற்றும் இறைச்சி உற்பத்தி பாதிப்படைகிறது.

இதை தடுப்பதற்காக ‘புருசெல்லா அபார்டஸ் எஸ்19 டெல்டா’  தடுப்பூசியை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் இந்திய கால்நடை ஆராய்ச்சி மையம் உருவாக்கியது. உத்தரப் பிரதேசத்தின் இசாத் நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்தில் எலிகள் மற்றும் எருமை கன்றுகளிடம் சோதனை செய்து இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டது. 

இந்த தடுப்பூசி தொழில்நுட்பத்தை பரிமாறிக் கொள்ளும் ஏற்பாட்டை காணொலி காட்சி மூலம் உயிரி தொழில்நுட்ப துறை கடந்த வாரம் செய்தது. உயிரி தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் (BIRAC) வழங்கிய தொழில்நுட்பத்தை, ஹெஸ்டர் பயோசயின்ஸ் நிறுவனம் பெற்று கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1659034



(Release ID: 1659108) Visitor Counter : 238