சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

உலகின் மிக நீளமான உயரமான ஷிங்குன் லா சுரங்கப் பாதை பணியை விரைவு படுத்துகிறது தேசிய நெடுஞ்சாலை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம்

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2020 1:32PM by PIB Chennai

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (NHIDCL) உலகின் மிக நீளமான உயரமான ஷிங்குன் லா சுரங்கப் பாதை (13.5 கி.மீ) பணியை  விரைவு படுத்தியுள்ளது. இந்த சுரங்கப் பாதையுடன் இணையும்  லடாக் யூனியன் பிரதேசம்  மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் லஹால் -ஸ்பிட்டி மாவட்ட சாலைகள் பணியும் வேகமாக நடத்கிறது.  இந்த சுரங்கப் பாதை பணி முடியும் போது, மணாலி-கார்கில் நெடுஞ்சாலை ஆண்டு முழுவதும் போக்குவரத்துக்கு திறந்திருக்கும்.

லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் சாலை கட்டமைப்புகளை ஏற்படுத்த மத்திய அரசு முன்னுரிமை அளித்துவருகிறது. இந்தப் பணிகளை தேசிய நெடுஞ்சாலை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். பனிக்கலாம் தொடங்குவதற்கு முன் அதாவது அக்டோபர் 15ம் தேதிக்குள் இந்த சாலை திட்டத்தை முடிக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1658082


(வெளியீட்டு அடையாள எண்: 1658185) வருகையாளர் எண்ணிக்கை : 223
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Telugu