எரிசக்தி அமைச்சகம்

பிகாரில் ரூ.6.99 கோடி மதிப்பிலான திட்டங்கள் மத்திய மின்துறை அமைச்சர் தொடக்கம்

Posted On: 18 SEP 2020 2:13PM by PIB Chennai

பிகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் பர்ஹாரா என்ற இடத்தில், ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் (ஆர்இசி) ரூ.6.99 கோடி மதிப்பில் மேற்கொண்ட  திட்டங்களை மத்திய மின்துறை மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.ஆர்.கே.சிங் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.  36 சாலை திட்டங்கள், 23 எல்இடி /சூரியமின்சக்தி  மின் விளக்குகள் திட்டம், 3 படித்துறை திட்டம், 3 சமுதாயக் கூடம் மற்றும் துணை சுகாதார மையங்கள், 12 ஆர்சனிக் அகற்றும் நிலையங்கள் உட்பட 77 திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

போஜ்பூர் மாவட்டத்தின் பர்ஹாரா பகுதியில் உள்ள கிராமங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுதான் இந்த திட்டங்களின் நோக்கம். இந்நிகழ்ச்சியில் மத்திய, மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1656103

******


(Release ID: 1656144)