சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

வாகனங்களுக்கான பல்வேறு சர்வதேச மாசு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 12 SEP 2020 3:32PM by PIB Chennai

வாகனங்களுக்கான பல்வேறு சர்வதேச மாசு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை  அமல்படுத்தும் மாற்றத்திற்கு வழிவகுக்கும் திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது.

வாகன உற்பத்தி தொழில் மேலும் வளர்வதற்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கை அதிகரிப்பதற்கும் அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாசு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமைகின்றன.

அடுத்த இரு வருடங்களில், தேவையான பிரிவுகளில் மின்னணு நிலையான கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் பிரேக் உதவி அமைப்புகளுக்கான தரங்களை இறுதி படுத்தும் முயற்சியில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

இந்திய வாகனங்களில் மாசு மற்றும் கட்டுப்பாட்டு அம்சங்களை மேம்படுத்துவதற்கு பல்வேறு விதிகளை அமைச்சகம் ஏற்கனவே தொகுத்து வெளியிட்டுள்ளது. தற்போது இதில் சர்வதேச அளவிலான தர நிர்ணய நிலைப்படுத்தலுக்காக சில முன்னுரிமைப் பகுதிகளை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்.

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653593 


(வெளியீட்டு அடையாள எண்: 1653624) வருகையாளர் எண்ணிக்கை : 257
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Telugu , Malayalam