அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட்-19 நோய் தொற்றுக்கான தீர்வுகள் குறித்து கூட்டாக கண்காணிக்க இந்தோ-அமெரிக்க விஞ்ஞானிகளின் 11 அணிகள் தேர்வு

Posted On: 02 SEP 2020 5:52PM by PIB Chennai

இந்திய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளின் பதினொரு அணிகள் புதுமையான ஆரம்பகால நோய் கண்டறியும் சோதனைகள், வைரஸ் தடுப்பு சிகிச்சை, மருந்து மறுபயன்பாடு, வென்டிலேட்டர் ஆராய்ச்சி, கிருமிநாசினி இயந்திரங்கள் மற்றும் சென்சார் அடிப்படையிலான அறிகுறிகளில் இருந்து கோவிட்-19 நோய் தொற்றுக்கான வெளிப்படையான தீர்வுகளைக் கண்காணிக்கும் திட்டத்தை  விரைவில் கூட்டாக தொடங்க உள்ளனர்..

அமெரிக்க--இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நன்கொடை நிதி (யு.எஸ்.ஐ.எஸ்.டி.இ.எஃப்) அமைப்பு ஏப்ரல் 2020-ல் கோவிட் -19 தாக்க மானியங்களின் கீழ் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து பெறப்பட்ட திட்டங்களின் கடுமையான இருநாட்டு மறுஆய்வு செயல்முறையின் மூலம் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இந்த அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன .


https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650677

                                                     ----



(Release ID: 1651050) Visitor Counter : 197