சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

டாக்டர் ஹர்ஷவர்தன், ஸ்டாப் டிபி கூட்டாண்மை செயல் இயக்குநருடன் டிஜிட்டல் முறையில் கலந்துரையாடல்

Posted On: 02 SEP 2020 6:20PM by PIB Chennai

மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், ஸ்டாப் டிபி கூட்டாண்மை செயல் இயக்குநருடன் டிஜிட்டல் முறையில் இன்று கலந்துரையாடினார்.

காசநோயை முற்றிலுமாக ஒழிப்பதற்கு இந்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக மத்திய அமைச்சர் கூறினார். துரித மூலக்கூறு சோதனைகள், மருந்து தடுப்பு குறித்த தகவல்களை வழங்குதல் ஆகியவற்றின் மூலம் இலவச நோய் கண்டறிதலை அதிகரிக்க அரசு உறுதி பூண்டுள்ளதாக அவர் கூறினார். நோயாளிகளுக்கு சிறந்த தரமான மருந்துகள், சிகிச்சைகள், ஊட்டச்சத்து அளித்தல் ஆகியவற்றின் மூலம், அனைவருக்கும், காசநோய்க்கு இலவச சிகிச்சை வழங்கவும் அரசு உறுதி பூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த எட்டு மாதங்களாக நாடு, கோவிட்-19 தொற்றுக்கு எதிராக போராடி வருவதாகத் தெரிவித்த டாக்டர் ஹர்ஷவர்தன், 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்கும் இலக்கை எட்டவேண்டும் என அனைத்து மாநிலங்களிலும் உள்ள சுகாதாரத்துறை மற்றும் அதன் அதிகாரிகளுக்கு தொடர்ந்து  நினைவு படுத்தப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்  https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1650702

------



(Release ID: 1651011) Visitor Counter : 167