புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

அடுத்த மாதம் நடைபெறும் முதல் உலக சூரியசக்தித் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில், அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை வெளிப்படுத்த ஐ.எஸ்.ஏ. திட்டமிட்டுள்ளது

Posted On: 17 AUG 2020 6:51PM by PIB Chennai

மத்திய மின் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்திறன் மேம்பாடு (IC) மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சரும் ISA சட்டமன்றத் தலைவருமான திரு ஆர்.கே.சிங் ஐஎஸ்ஏ ஏற்பாடு செய்த, செப்டம்பர் 08, 2020 அன்று இணைய வாயிலாக நடைபெற இருக்கும் முதல் உலக சூரிய தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் விவரங்களை இன்று பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம், அதிநவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் கவனத்தை ஈர்ப்பதாகும், இது சூரிய சக்தியை மிகவும் திறமையாகப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு உத்வேகம் அளிக்கும். இந்த நிகழ்வின் போது, ​​உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சூரிய ஆற்றல் குறித்த தங்கள் கட்டுரைகளை வெளியிட உதவும் சூரிய ஆற்றல் பற்றிய ஐஎஸ்ஏ இதழை (I JOSE) ISA தொடங்கவுள்ளது. இந்த இதழில் உள்ள கட்டுரைகள் உலகளாவிய நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படும், மேலும் ISAவின் பரந்த NFP களின் நெட்வொர்க் (தேசிய குவிய புள்ளிகள்) மற்றும் STAR (சூரிய தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு வள மையங்கள்) மையங்கள் மூலம் உறுப்பு நாடுகளைச் சென்றடையும்.

அனைத்து ISA பிராந்தியங்களிலிருந்தும் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் வழங்கும் முதல் உலக சூரியத் தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் தொடக்க உரையை இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைப்பார். உலகின் விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் உயர்மட்டப் பிரமுகர்கள் மற்றும் ஒரு தலைமை நிர்வாக அதிகாரியின் மாநாடு, குறைந்த விலை, புதுமையான மற்றும் மலிவு சூரியசக்தித் தொழில்நுட்பங்கள் குறித்த விவாதங்களின் தொனியை அமைக்கும். தொடக்க அமர்வில் மூத்த அரசாங்க செயல்பாட்டாளர்கள், உலகளாவிய நிறுவனங்கள், நிதி மற்றும் பலதரப்பு நிறுவனங்கள், சிவில் சமூகம், அடித்தளங்கள் மற்றும் Think & Thanks அமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

மத்திய மின் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்திறன் மேம்பாடு (IC) மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சரும் ISA சட்டமன்றத் தலைவருமான திரு ஆர்.கே.சிங் தொடக்க நிகழ்வில் சிறப்புரையாற்றிய போது, முதல் உலக சூரியசக்தித் தொழில்நுட்ப உச்சி மாநாட்டைப் பற்றிக் கருதியதற்காக ISAவை வாழ்த்தினார். இந்த நிகழ்வு குறிக்கோளை அடைய சேவை செய்ய உதவுவது மட்டுமல்லாது புதுமைகள் மூலம் உலகெங்கிலும் சூரிய சக்தியின் தேவையான வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த முக்கியமான சந்திப்பில், உலகம் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட முயற்சிக்கும் போது, ​​நமது கூட்டு முயற்சிகள் இந்தச் சவாலை எதிர்கொள்ளவும், அனைவருக்கும் உலகளாவிய மின்சார அணுகலின் நோக்கத்தை அடையவும் உதவும். மாநாட்டில் பங்கேற்க அனைத்து பயனாளர்களையும் திரு சிங் அழைத்தார்.

************



(Release ID: 1646613) Visitor Counter : 195