எஃகுத்துறை அமைச்சகம்

'தற்சார்பு இந்தியா: வீடு, கட்டிடக் கட்டுமானம் மற்றும் விமானத் துறையில் எஃகுப் பயன்பாட்டை அதிகரித்தல்' என்னும் இணையக் கருத்தரங்கை எஃகு அமைச்சகம் நடத்தவிருக்கிறது

Posted On: 14 AUG 2020 2:31PM by PIB Chennai

'தற்சார்பு இந்தியா: வீடு, கட்டிடக் கட்டுமானம் மற்றும் விமானத் துறையில் எஃகுப் பயன்பாட்டை அதிகரித்தல்' என்னும் தலைப்பிலான இணையக் கருத்தரங்கை இந்தியத் தொழில் கூட்டமைப்புடன் (CII) இணைந்துவீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் எஃகு அமைச்சகம் நடத்தவிருக்கிறது  கட்டுமானம், உள்கட்டமைப்புத் துறைகளில் எஃகுப் பயன்பாட்டை அதிகரிப்பதோடு, எஃகின் தீவிரப் பயன்பாடுள்ள கட்டுமானத்தை ஊக்குவிக்க பயனர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை இந்த இணையக் கருத்தரங்கு போக்கும். நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக பெட்ரோலிய, இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத்துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் கலந்து கொள்வார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்கள் இணை அமைச்சர் திரு. ஹர்தீப்சிங் புரி சிறப்பு விருந்தினராக இருப்பார். எஃகுக்கான இணை அமைச்சர் திரு பக்கன் சின் குலாஸ்தே தொடக்க அமர்வில் கலந்து கொள்வார்.

 

எஃகு சார்ந்த வடிவமைப்பு மற்றும் கட்டிடம், வீடுகள் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றின் கட்டுமானங்களில் எஃகுப் பயன்பாட்டை அதிகரித்தல் குறித்த பயனர்களின் எண்ணங்கள் மீது இந்த இணையக் கருத்தரங்கு கவனம் செலுத்தும். தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்தல், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள், புதிய பொருள்களுக்கான உற்பத்தி மற்றும் ஆராய்ச்சித் திறன்கள் ஆகியவற்றை பற்றிய எஃகு உற்பத்தியாளர்களின் கருத்துகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.


*****



(Release ID: 1645771) Visitor Counter : 118