குடியரசுத் தலைவர் செயலகம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றுகிறார்

Posted On: 13 AUG 2020 7:00PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், நாட்டின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 14, 2020) நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

குடியரசுத் தலைவரின் உரை, இரவு 7 மணிக்கு அகில இந்திய வானொலியிலும், தூர்தர்ஷனின் அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஒலி / ஒளிபரப்பாக உள்ளது. அவர் உரை முதலில் இந்தியிலும், அதைத் தொடர்ந்து ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளிலும், தூர்தர்ஷனின் பிராந்திய அலைவரிசைகளிலும் ஒளிபரப்பாகும். இதே போல், அகில இந்திய வானொலியில் இரவு 9.30 மணிக்கு குடியரசுத்தலைவரின் உரை, பிராந்திய மொழிகளில் ஒலிபரப்படுகிறது.

 

*****



(Release ID: 1645741) Visitor Counter : 87