குடியரசுத் தலைவர் செயலகம்
ஜன்மாஷ்டமியை ஒட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
11 AUG 2020 5:22PM by PIB Chennai
ஜன்மாஷ்டமியை ஒட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்,
“ஜன்மாஷ்டமி நன்னாளில், எனது, அனைத்து சக இந்தியக் குடிமக்களுக்கும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும், எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நியாயமான, உணர்வுபூர்வமான, இரக்க குணம் நிறைந்த ஒரு சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கு ஒரு உந்துசக்தியாக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இருக்கிறார். பலனை எதிர்பாராமல் நமது கடமைகளைச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது அவர் கர்ம யோகாவில் கூறியுள்ள செய்தியாகும். கோவிட்19 காலத்தில் இந்நோய்க்கு எதிரான நமது போராட்டத்தில் முன்னணியில் நின்று செயலாற்றும் போராளிகளிடையே இந்த மனப்பாங்கை தெளிவுறக் காண முடிந்தது. இந்த விழாவை நாம் கொண்டாடும் நேரத்தில் காலங்கடந்து, உலகம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய கிருஷ்ண பரமாத்மாவின் நல்லுரைகளை நம்முடைய வாழ்க்கையும் மனித சமுதாயமும் மேம்படும் வகையில் பின்பற்ற, உறுதி பூண வேண்டும்” என்று அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவரின் செய்தியை ஹிந்தியில் படிக்க இங்கே சொடுக்கவும்Click here to see President's message in Hindi
(रिलीज़ आईडी: 1645104)
आगंतुक पटल : 206