குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மாநிலங்களவை உறுப்பினர் திரு அமர் சிங்கின் அகால மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் இரங்கல்

Posted On: 01 AUG 2020 7:06PM by PIB Chennai

இந்திய குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு எம். வெங்கையா நாயுடு, மாநிலங்களவையின் தற்போதைய உறுப்பினர் திரு. அமர் சிங்கின் அகால மறைவு குறித்து தமது ஆழ்ந்த இரங்லைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். திரு. அமர் சிங், 64, கடந்த சில மாதங்களாக சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார்.

குடியரசுத் துணைத் தலைவர் , சிங்கப்பூருக்கான இந்தியத் தூதருடன் தொடர்பில் இருந்தார். திரு. சிங்கின் சிகிச்சை தொடர்பாக தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அவர் அறிவுறுத்தி வந்தார்.

திரு. அமர் சிங்குடனும் தொடர்பு கொண்டிருந்த திரு. நாயுடு, அவரது உடல் நலம் குறித்து அவ்வப்போது விசாரித்து வந்தார். திரு. சிங் விரைந்து குணமடைந்து இந்தியா திரும்புவார் என அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.

குறைந்த வயதில் திரு. சிங் மறைந்தது குறித்து வேதனையை  வெளியிட்டுள்ள குடியரசுத் துணைத் தலைவர் , நாடு திறமையான நாடாளுமன்றவாதியை இழந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.

அரசியல் அரங்கில் திரு. சிங் புகழ் பெற்று விளங்கினார். சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய பிரிவு மக்களின் முன்னேற்றத்துக்காக எப்போதும் பாடுபட்டு வந்தார்’’ என்று அவர் கூறியுள்ளார்.                 

****
 



(Release ID: 1643024) Visitor Counter : 144