நிதி அமைச்சகம்

நிதித் தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்பீட்டு மசோதா, 2017 பற்றிய தெளிவு

Posted On: 27 JUL 2020 6:47PM by PIB Chennai

நிதித் தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்பீட்டு மசோதா, 2017 (எஃப்.ஆர்.டி.ஐ மசோதா) மக்களவையில் ஆகஸ்ட் 10, 2017 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் பின்னர், விசாரணை மற்றும் அறிக்கைக்காக நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த விஷயத்தை மேலும் விரிவான ஆய்வு மற்றும் மறுபரிசீலனை செய்வதற்காக அரசாங்கம் 2018 ஆகஸ்ட் மாதத்தில் எஃப்.ஆர்.டி.ஐ மசோதாவை வாபஸ் பெற்றது.

எஃப்.ஆர்.டி.ஐ மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், எஃப்.ஆர்.டி.ஐ மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்த அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் இந்தச் செய்திக் குறிப்பின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.

                                          -------

 

 

 



(Release ID: 1641740) Visitor Counter : 191