உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
உத்திரப்பிரதேசத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
24 JUN 2020 4:39PM by PIB Chennai
உத்திரப்பிரதேசத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சிராவஸ்தி, கபிலவஸ்து, லும்பினி போன்ற பவுத்த பண்பாட்டு தலங்களின் அருகே குஷிநகர் (இதுவும் பவுத்த பண்பாட்டு தலம் தான்) அமைந்திருப்பதால், இதனை சர்வதேச விமான நிலையமாக அறிவித்திருப்பது, விமான பயணிகளுக்கு பெரிதும் பயனளிப்பதுடன், இந்தப் பிராந்தியத்தின் உள்நாட்டு/சர்வதேச சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும்.
(Release ID: 1633951)
Visitor Counter : 150
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada