அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொரோனா வைரஸை வளர்க்கும் ஆராய்ச்சியாளர்கள் மருந்துப் பரிசோதனை மற்றும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உதவும்

Posted On: 29 MAY 2020 11:38AM by PIB Chennai

கோவிட்-19 நோயாளிகளிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள் மூலம் கொரோனா வைரஸை (SARS-CoV-2) நிலையாக வளர்க்கும் முறையை செல்லுலார் மற்றும் மாலிக்குலார் மையம் (CCMB) உருவாக்கியுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பலரிடமிருந்து இந்த வைரஸ்களை உயிரணு மற்றும் நுண்ணுயிரியல் மையத்தைச் (Centre for Cellular and Micro Biology – CCMB) சேர்ந்த வைராலஜி நிபுணர்கள் பிரித்துள்ளனர். பரிசோதனைக்கூடங்களில் இந்த வைரஸ்களை வளர்ப்பதன் மூலம், தடுப்பு மருந்து உருவாக்குதல் மற்றும் கோவிட்-19 சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்துகளைப் பரிசோதிக்க முடியும்.

மருந்துப் பரிசோதனை நடவடிக்கைகளுக்கும், இந்த வைரஸ் வளர்ப்பு உதவும். சோதனைக் குழாய்களில் வைரசுக்கு எதிரான மருந்துகளின் செயல்பாட்டுத் திறனைப் பரிசோதிக்க முடியும்.

விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1627590



(Release ID: 1627665) Visitor Counter : 302