ரெயில்வே அமைச்சகம்
இந்திய ரயில்வே நாடு முழுவதும் மே 10, 2020 (1500 மணி) வரை 366 “ஷ்ரமிக் சிறப்பு’’ ரயில்களை இயக்கியுள்ளது.
प्रविष्टि तिथि:
10 MAY 2020 4:30PM by PIB Chennai
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், புனித யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் தவித்து வந்த இதர நபர்களை சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, இந்திய ரயில்வே ‘’ஷ்ரமிக் சிறப்பு ‘’ ரயில்களை இயக்க முடிவெடுத்தது.
மே 10, 2020 வரை, மொத்தம் 366 ‘’ஷ்ரமிக் சிறப்பு ‘’ ரயில்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து இயக்கப்பட்டுள்ளன. இவற்றில் 287 ரயில்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் சென்றடைந்துள்ளன. 79 ரயில்கள் பயணத்தில் உள்ளன.
இந்த சிறப்பு ரயில்களில், தனி நபர் இடைவெளியைக் கடைபிடித்து, அதிகபட்சமாக சுமார் 1200 பயணிகள் வரை பயணம் செய்யலாம். ரயில்களில் ஏறுவதற்கு முன்பாக, பயணிகளுக்கு முறையான பரிசோதனை செய்யப்படுகிறது. பயணத்தின் போது பயணிகளுக்கு, இலவச உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுகிறது.
(रिलीज़ आईडी: 1622728)
आगंतुक पटल : 337
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam