பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய விமானப்படையின் மிக்-29 விமான விபத்து

இடுகை இடப்பட்ட நாள்: 08 MAY 2020 12:19PM by PIB Chennai

இன்று (8.5.2020) காலை 10.45 மணியளவில் இந்திய விமானப்படையின் மிக்-19 விமானம், பயிற்சியின் போது ஜலந்தர் விமான தளத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது. விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறால், அது கட்டுப்பாட்டை இழந்தது. விமான ஓட்டுனர் பத்திரமாக வெளியே குதித்து தப்பினார். பின்னர் அவர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


(வெளியீட்டு அடையாள எண்: 1622150) வருகையாளர் எண்ணிக்கை : 219
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Odia , Telugu , Malayalam