அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மனித நுரையீரலின் எபிதீலியல் செல்லில் கொரோனா வைரஸை வளர்க்கப்போகும் விஞ்ஞானிகள்

Posted On: 05 MAY 2020 7:21PM by PIB Chennai

கோவிட்-19 மீதான ஆய்வு நடவடிக்கைகளுக்காக உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் ஹைதரபாத், பெங்களூருவை சேர்ந்த ஐஸ்டெம் ரிசெர்ச் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த ஆய்வுக் கூட்டணியின் மூலம், கோவிட்-19  தொற்றுக்கு எதிரான சாத்தியமுள்ள மருந்துகள் மற்றும் தடுப்பு மருந்துகளின் ஆய்வுக்கூடச் சோதனைக்கு உதவுவதற்காக கொரோனா வைரஸை மனித உயிரணு வழித்தடங்ககளில் வளர்ப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்.

சாத்தியமுள்ள மருந்துகளின் ஆய்வுக்கூடச் சோதனை முறைக்கு அறிவார்ந்த ரீதியிலன அடித்தளத்தை ஏற்படுத்தும் நோக்கில், கொரோனா வைரஸின் மூலக்கூறு மற்றும் நோயியல் குணங்களை புரிந்துக் கொள்வதற்காக ஐஸ்டெம்மின் ஆன்டி-கோவிட் பரிசோதனை தளத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படும் அதன் மனித நுரையீரல் எபிதீலியல் செல் வளர்ப்பு முறையை ஆய்வுக் குழு பயன்படுத்தும் என உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மைய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

***



(Release ID: 1621418) Visitor Counter : 147