பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் திரு.சஞ்சய் கோத்தாரி மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தார்

Posted On: 05 MAY 2020 2:38PM by PIB Chennai

திரு.சஞ்சய் கோத்தாரி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின், மத்திய பணியாளர் நலன், பொது மக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகிய துறைகளுக்கான இணையமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங்கை சந்தித்தார். திரு.கோத்தாரி, இதற்கு முன்பு குடியரசுத் தலைவரின் செயலராக இருந்தார்.

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் சட்டவரம்பு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் அமைச்சரிடம் எடுத்துரைத்தார்.



(Release ID: 1621173) Visitor Counter : 2408