ஊரக வளர்ச்சி அமைச்சகம்

கோவிட்-19 தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் அதே சமயத்தில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, ஊரக வீட்டு வசதி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, கிராமப்புற வாழ்வாதாரங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றை விரைந்து செயல்படுத்துமாறு அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மாநிலங்களைக் கேட்டுக்கொண்டார்

Posted On: 29 APR 2020 8:36PM by PIB Chennai

நாட்டில் கட்டுப்பாடுகள் இல்லாத பகுதிகளில் ஏப்ரல், 20 ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், பிரதமர் கிராமப்புற ஏழைகள் மறுவாழ்வு திட்டம், பிரதமர் சாலைகள் திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் ஆகியவை தொடர்பான பணிகள் இந்த பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளதையும் கருத்தில் கொண்டுமத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் வேளாண்மை, விவசாயிகள் நல அமைச்சர், திரு நரேந்திர சிங் தோமர் மற்றும் ஊரக வளர்ச்சி இணை அமைச்சர், சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஊரக வளர்ச்சி அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இரண்டு மணி நேர காணொலி காட்சி மூலம் இன்று பேசினனார்.

நடப்பு நிதியாண்டில் ரூ. 36,400 கோடியை ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஏற்கனவே அவர்களுக்கு வழங்கியுள்ளதாக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிடம் அவர் தெரிவித்தார்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் ரூ. 33,300 கோடிக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், கூலிகள் மற்றும் பொருள்கள் தொடர்பான முந்தைய ஆண்டுகளின் அனைத்து நிலுவைத் தொகைகளையும் செலுத்த அதிலிருந்து ரூ. 20,624 கோடி வழங்கப்பட்டுள்ளதுமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் திட்டத்தின் கீழ் அனைத்து செல்வுகளையும் சந்திக்க ஜூன் 2020 வரை இந்த தொகை போதுமானதாகும். பல்வேறு ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு போதுமான நிதி ஆதாரங்கள் இருப்பதாக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிடம் அமைச்சர் உறுதி அளித்தார்.

நீர் வள அமைச்சகம் மற்றும் நில வளத் துறையின் திட்டங்களோடு தொடர்புடைய தண்ணீர் சேமிப்பு, நிலத்தடி நீர் மீள்நிரப்பு மற்றும் நீர்ப்பாசன பணிகள் மீது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் திட்டத்தின் கீழ் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தின் (கிராமங்கள்) கீழ் 2.21 கோடி வீடுகளுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்த அமைச்சர், அதில் 1 கோடியே 86 ஆயிரம் வீடுகளுக்கான பணிகள் முடிவடைந்துள்ளதாக கூறினார்.  48 லட்சம் வீடுகளுக்கான மூன்றாம் மற்றும் நான்காம் தவணைகள் பயனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த வீடுகளை விரைவில் முடிக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

***



(Release ID: 1619894) Visitor Counter : 212