உள்துறை அமைச்சகம்

இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு, உறைவிடம், உணவு கிடைப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சரவை செயலாளர் கடிதம்

प्रविष्टि तिथि: 16 APR 2020 7:18PM by PIB Chennai

நாட்டில் கொவிட்-19 தொற்று பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்க நடவடிக்கைகளின் போதுஇடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சிக்கித் தவிப்பவர்களின் நலனுக்கு அதிக முக்கியத்துவத்தை மத்திய அரசு அளித்து வருகிறது.

இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு, உறைவிடம் மற்றும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய, உள்துறை அமைச்சகம் வெளியிட்ட விரிவானவழிகாட்டுதல்கள் சிறப்பாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சரவை செயலாளர் கடிதம் எழுதி  உள்ளார்.

நிலைமையை உடனே ஆய்வு செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களையும் அறிவுறுத்தும்படி இந்த கடிதம் மாநிலங்களை வலியுறுத்துகிறது. இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைக்கவும் கண்காணிக்கவும் தொடர்பு அலுவலர்களை, இது வரை நியமிக்கப்படாமல் இருந்தால், மாவட்ட ஆட்சி தலைவர்கள் நியமிக்கலாம்மாநகரங்களில் நலத் திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பை மாநகராட்சி ஆணையர்களிடம் வழங்கலாம்.

இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சிக்கித் தவிக்கும் நபர்களின் விரிவான கணக்கெடுப்பை அனைத்து மாவட்டங்களும் எடுத்து, அவர்களுக்கு உணவும் உறைவிடமும் அளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிவாரண முகாமும் ஒரு மூத்த அலுவலரின் பொறுப்பில் இருக்க வேண்டும் என்றும் அந்த கடிதம் வலியுறுத்துகிறது. பொது முடக்கத்தின் போது இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சிக்கித் தவிக்கும் நபர்களுக்கு உணவை வழங்க சமூக சமுதாய அமைப்புகள் மற்றும் மதிய உணவு வசதிகளின் வலைப்பின்னலின் ஆதரவை அவர்கள் பட்டியலிடலாம். சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி மனநிலை சமூக ஆலோசனையை அவர்களுக்கு வழங்கலாம் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

***


(रिलीज़ आईडी: 1615336) आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam