விவசாயத்துறை அமைச்சகம்

ஊரடங்கின் போது களஅளவில் விவசாயப் பணிகளையும் விவசாயிகளையும் ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

Posted On: 13 APR 2020 7:24PM by PIB Chennai

ஊரடங்கின் போது, விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், விவசாயப் பணிகளுக்கான வசதிகளைச் செய்து கொடுக்க, மத்திய அரசின் விவசாய, ஒத்துழைப்பு மற்றும் விவசாயிகள் நலத்துறை களஅளவில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேம்படுத்தப்பட்ட நிலவரம் வருமாறு;

  1. தேசிய உணவுப்பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், மாநிலங்களுக்கு விதைகள் விநியோகத்தை உறுதிசெய்ய, இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியம் பெறுவதற்கான விதை ரகங்கள் 10 ஆண்டுகளுக்கும் குறைவானதாக இருக்கவேண்டும். வடகிழக்குப்பகுதி, மலைப் பிராந்தியங்கள், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மட்டும் , தேசிய உணவுப்பாதுகாப்பு இயக்கத்தின் கீழ்,  Truthful Label  விதைகளை மானியத்துக்கு அனுமதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
  2. பிரதமர் விவசாய நல நிதித்திட்டத்தின் கீழ், 24.3.2020 முதல் அமலில் உள்ள ஊரடங்கின் போது, சுமார் 8.31 கோடி விவசாயிகளின் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. இதற்காக, ரூ.16,621 கோடி இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளது.
  3. பிரதமர் ஏழைகள் நலத்திட்டத்தின் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுமார் 3,985 மெட்ரிக் டன் பருப்பு வகைகள் விநியோகத்துக்காக அனுப்பப்பட்டுள்ளன.
  4. பஞ்சாபில், பரம்பராகத் விவசாய வளர்ச்சி திட்டத்தின் கீழ், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மின்சார வாகனம், வீடுகளுக்கு நேரடியாகச் சென்று இயற்கை விவசாய உற்பத்திப்பொருள்களை விநியோகித்து வருகிறது.
  5. மகாராஷ்டிராவில், 34 மாவட்டங்களில், ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனை முறை மூலமாக, 27,797 விவசாய உற்பத்தி அமைப்புகள் 21,11,171 குவிண்டால் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்துள்ளன.


(Release ID: 1614234) Visitor Counter : 204