அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிகுறியற்ற கொவிட்-19 தொற்றைப் பரிசோதிக்கும் கருவிகளை உருவாக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதி, தடுப்பு மருந்து உற்பத்திக்கும் தீவிர முயற்சி

Posted On: 11 APR 2020 12:21PM by PIB Chennai

கோவிட்-19 தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில், அறிகுறியற்ற தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைக் கருவிகளை உருவாக்கவும், தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கவும், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (டிஎஸ்டி), ஸீகல் பயோ சொலுசன்ஸ் என்ற புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளது.

இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள தீவிர வைரோசம்  தொழில்நுட்பம் ஏவிடி, தடுப்பு மருந்து தயாரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊக்குவிப்பானாக செயல்படும். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஏவிடி தளம் புதுமையான, தீங்கு விளைவிக்காத, பொருளாதார ரீதியில் சாதகமான விதத்தில் நோய்க்கிருமியை எதிர்க்கும் ஆன்டிஜென்களை உருவாக்கப் பயன்படும். இந்த தொழில்நுட்பம், கோவிட்-19 தொற்றைத் தடுக்கும் மருந்தைத் தயாரிக்கவும், தொற்றைக் கண்டறியும் எலிசா சோதனைக் கருவிகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படும்.

சோதனைக் கருவிகள் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் களச்சோதனைக்கு தயாராகி விடும் என்றும், 10 முதல் 11 மாத காலத்தில் அங்கீகாரம் பெற்றுவிடும் என்றும் தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்க்கிறது. மறுபுறம், ஏவி தடுப்பு மருந்து தயாரிக்க அதிக காலம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தற்போதைய அவசர நிலையைக் கருத்தில் கொண்டு, 80 நாட்களுக்குள் அதற்கான ஆதார வேலைகளை முடித்து, 18 முதல் 20 மாதங்களுக்குள் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கம் மற்றும் முதல்கட்ட சோதனையை நிறைவு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.



(Release ID: 1613409) Visitor Counter : 235